தகவல் அறியும் சட்டத்தை இலங்கை மக்களுக்கு உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தும் நிகழ்வு இன்று (17) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.
காலை 10.30 மணிக்கு தகவல் அறியும் சட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தவுள்ளார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக, பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதாரண, அமைச்சின் செயலாளர் சட்டத்தரணி நிமல் போபகே, அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ரங்க கலன்சூரிய உட்பட பல அரச அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.