மாலபே தனியார் மருத்துவமனை சைட்டம் குறித்து அனைத்து தரப்பினரும் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்கான குழுவொன்று அமைக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் இலங்கை பல்மருத்துவர்களின் சங்கம் ஆகிய சங்கங்களின் சைட்டம் தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
இதன்போதே, சைட்டம் குறித்த விடயம் தொடர்பில் அனைத்து தரப்பினரும் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்கான குழு ஒன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்ககது.