அதிபர்களுக்கான விசேட கொடுப்பனவை அதிகரிப்பது தொடர்பில் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
பாராளுமன்ற கட்டிடத்தில் இன்று (08) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இலங்கை முழுவதும் உள்ள 10,162 தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் பாடசாலைகளில் பணியாற்றும் அதிபர்களுக்கே விசேட கொடுப்பனவை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பாடசாலை முகாமைத்துவத்தில் அதிபரிகளின் பாரிய பங்களிப்பை கருத்திற்கொண்டு விசேட கொடுப்பனவை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.