வெசாக் தினத்தை சர்வதேச விடுமுறைத் தினமாக அறிவிப்பதற்கான பிரேரணை சமர்ப்பிப்பத்தற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீதி மற்றும் பௌத்த விவகார அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
தேரவாத பௌத்தத்தை உலகம் முழுவதும் விரிவுபடுத்தும் நோக்கில் மேலும் சில பிரேரணைகள் முன்வைக்கவுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் இப்பிரேரணை சர்வதேச வெசக் தின கொண்டாட்டங்களின் இறுதி நிகழ்வின் போது கண்டியில் வைத்து சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், சர்வதேச வெசாக் தின கொண்டாட்டத்தின் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் மே மாதம் 12ம் திகதி கொழும்பு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் சுமார் நூறு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.