“அபிமானம் மிக்க ஒரு தேசமாக, ஒன்றிணைந்த இலங்கை மக்களாக எதிர்காலத்தில் முன்னோக்கிச் செல்வதற்காக சுயநலத்தை ஒதுக்கிவிட்டு, நாட்டுக்காகப் பாடுபட்டு உழைப்பதே எமக்குள்ள சவாலாகும். இதனை
வெற்றிகொள்ள துணிச்சலுடனும் நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் செயற்பட இந்தச் சுதந்திர தினத்தில் விசேடமாக உறுதி பூணுவோம்” என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது-
மிகவும் மோசமான ஓர் ஆட்சிக் காலத்தைத் தோற்கடித்து நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்து இரண்டு வருடங்கள் பூர்த்தியான நிலைமையில், காலனித்துவ ஆட்சியிலிருந்துதான சுதந்திரத்தின் 69 ஆவது வருடப் பூர்த்தியைக் கொண்டாடுகின்றமை தனிச்சிறப்பு மிக்க சந்தர்ப்பம் என நான் நினைக்கிறேன்.
நாடு என்ற வகையில் நாம் பெற்றுக்கொண்ட சுதந்திரத்தை மிகவும் அர்த்தமுள்ளதாக ஆக்கிக் கொள்வது நம் அனைவரினதும் பொறுப்பு என்பதுடன், தற்போதைய அரசாங்கம் நாட்டினதும், மக்களினதும் பொருளாதார, சமூக, ஆன்மீக சுதந்திரம் தொடர்பாக மிகுந்த பொறுப்புடன் செயற்படுகின்றது என்பதை இச்சந்தர்ப்பத்தில் விசேடமாகக் குறிப்பிட விரும்புகின்றேன்.
கடந்த இரண்டு வருட காலப்பகுதியினுள் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தல், நட்புறவான சர்வதேசத் தொடர்புகளை மேம்படுத்தி, பரஸ்பர நம்பிக்கையை வெற்றி கொள்ளுதல், இன, சமய பேதங்களைத் தாண்டிய மனித நேயமிக்க அமைதியான நாடொன்றைக் கட்டியெழுப்புவதற்கான அடிப்படையை உருவாக்கல், நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துதற்கான முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்ற பல வெற்றிகளை எம்மால் பெற்றுக் கொள்ள முடிந்தது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
“அபிமானம் மிக்க ஒரு தேசமாக, ஒன்றிணைந்த இலங்கை மக்களாக எதிர்காலத்தில் முன்னோக்கிச் செல்வதற்காக சுயநலத்தை ஒதுக்கிவிட்டு, நாட்டுக்காகப் பாடுபட்டு உழைப்பதே எமக்குள்ள சவாலாகும். இதனை வெற்றிகொள்ள துணிச்சலுடனும் நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் செயற்பட இந்தச் சுதந்திர தினத்தில் விசேடமாக உறுதி பூணுவோம்” என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.