இலங்கையில் நாளை (04) கொண்டாடப்படவுள்ள 69ஆவது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இப்புதிய போக்குவரத்து திட்டமானது நாளை (04) அதிகாலை மூன்று மணி தொடக்கம் பகல் 12.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, காலி முகத்திடல் வரையான காலி வீதியும் பாராளுமன்ற சுற்றுவட்டமும் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும்.
எனவே, சாரதிகள் மாற்றுவழிகளை பயன்படுத்துமாறு பொலிஸ் தலைமையகம் கோரியுள்ளது.