தகவல் அறியும் சட்டமூலம் இன்று (03) நள்ளிரவு தொடக்கம் அமல்படுத்தப்படவுள்ளதாக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
இன்று (03) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
மேலும் அரசாங்கத்தின் தேர்தல் உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் இன்று முதல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இலங்கையின் 69ஆவது சுதந்திரத்திற்கு முன்னர் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியுமாகியுள்ளமை எமக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும்.
இதன்மூலம் அரசாங்கம் நிதியை பயன்படுத்தும் விதம் பற்றியும், தீர்மானங்களை மேற்கொள்ளும் விதம் தொடர்பாகவும் மக்கள் தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.
அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் ஆட்சி நடைமுறையை முன்னெடுத்து செல்கிறது. அதில் மக்களுக்கு மறைக்க வேண்டிய விடயங்கள் எதுவும் கிடையாது.
மேலும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பாக அதிகாரிகளுக்கு பயற்சி விரைவில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன என்று அமைச்சர் தெரிவித்தார்.