வடக்கு விவசாயிகள் தமது நெல்லை களஞ்சியப்படுத்துவதற்கான நெற்களஞ்சியசாலையொன்று அண்மையில் மன்னார் நானாட்டான் பிரதேசத்தல் திறந்து வைக்கப்பட்டது.
சுமார் 10,000 மெற்றிக் தொன் வரையிலான நெல்லை களஞ்சியப்படுத்தி வைக்கக்கூடிய இக்களஞ்சியசாலையானது கிராமிய அபிவிருத்தி வங்கியினால் 25 கோடி நிதி செலவீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இக்களஞ்சியசாலையை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார். இந்நிகழ்வில் நிதியமைச்சரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.