வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் ஆழ்கடல் கடற்றொழில் அலகு திறப்பு விழா மற்றும் மீனவர்களுக்கு உதவி வழங்கும் வைபவம் கடந்த 28ம் திகதி நடைபெற்றது.
இதன்போது மானிய அடிப்படையில் இரண்டரை இலட்சம் ரூபாய் பெறுமதியான ஆழ்கடல் வலைகள் 12 பேருக்கும், கடல் பாதுகாப்பு கவச அங்கிகள் 13 பேருக்கும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.
அத்தோடு பாசிக்குடா மீனவர்கள் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் முப்பது இலட்சம் ரூபாய் பெறுமதியான மீனவர் தங்குமிட கட்டடம் நிர்மானிக்கப்படும் என்றும், முகத்துவாரக் கடலிலுள்ள கற்பாறையை அகற்றித் தருவதாகவும் கடற்;றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் வாக்குறுதி வழங்கினார்.
மேலும் அமைச்சரினால் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், தேவைகள் குறித்தும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது..
மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தில் உதவிப் பணிப்பாளர் ஆர்.ருக்சன் குரூஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கடற்;றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர கலந்து கொண்டதுடன், அதிதிகளாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள், வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், கடற்றொழில் அமைச்சின் உயர் அதிகாரிகள், மீனவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
LDA_dmu_batti