வர்த்தக நடவடிக்கைகளை இலகுபடுத்தும் அமைப்பின் இரண்டாம் அமர்வு இன்று (27) மாலை 2.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
கொழும்பு 1, ராசிக் பரீத் மாவத்தையில் உள்ள மிலோத நிதி ஆய்வு நிறுவனத்தில் நடைபெறவுள்ள இவ்வமர்வானது நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆலோசனைக்கமைய நிதியமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பாகும்.
இலங்கை வரத்தகர்கள் தமது வியாபாரத்தை இலகுவாக அபிவிருத்தி செய்துக்கொள்வதற்குள்ள தடைகளை நீக்கும் நோக்கில் இவ்வமர்வு நடத்தப்படுகிறது.
கடந்த அமர்வின் பின்னர் வியாபாரத்தை முன்னெடுப்பதற்கிருந்த பல்வேறு தடைகள் நீக்கபட்டதாகவும் கடன் தொடர்பில் தகவல் வழங்கும் கிரிப் நிறுவனத்தினூடாக தகவல்களை பெற்றுக்கொள்ளல், ஏற்றுமதி செய்யும் மீன்கள் லேசர் பரிசோதனை ரத்து செய்தல் , கைவிடப்பட்ட மீனவ துறைமுகங்கள் அபிவிருத்தி செய்யபபட்டு வௌிநாட்டு மீனவப் படகுகளை புனர்நிர்மானம் செய்தலுக்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற பல நன்மைகளை இவ்வமைப்பினூடாக உள்ளூர் வியாபாரிகள் பெற்றுக்கொள்ள முடியும்.
நிதியமைச்சரின் தலைமையில் நடைபெறும் இவ்வமர்வில் நிதி இராஜாங்க அமைச்சர் லஷ்மன் யாப்பா அபேவர்தன, கைத்தொழில் மற்றும் வர்த்தக விவகார அமைச்சர் ரிஷாத் பதியுதீன், பொது வர்த்த அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசீம், அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம ஆகிய அமைச்சர்களும், இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, திரைசேரி செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, பிரதமர் ஆலோசகர் சரித்த ரத்வத்த மற்றும் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் ஆலோசகர் ஆர். பாஸ்கரலிங்கம் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.