எட்டாவது யாழ் சர்வதேச வர்த்த சந்தை 2017 நாளை (27) யாழ் மாநாகரசபை மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
எதிர்வரும் 29ம் திகதி வரை நடைபெறவுள்ள இவ்வர்த்தக சந்தையில் சுமார் 300 உள்நாட்டு வௌிநாட்டு காட்சிக்கூடங்கள் அமைக்கப்படவுள்ளதுடன் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உற்பத்திகள் காட்சிப்படுத்தப்படவுள்ளதாகவும் நாடு முழுவதிலும் இருந்து 60,000 இற்கும் மேற்பட்டவர்கள் கண்காட்சிக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் முதலீடு செய்வது தொடர்பில் ஆராய்வதற்கு இந்திய வர்த்தக சம்மேளனத்தசை் சேர்ந்த சுமார் 75 பேரைக் கொண்ட குழுவினர் நாளை இந்தியாவில் இருந்து இக்கண்காட்சிக்கு வரவுள்ளனர்.
அனைத்து வயதினரும் அனுபவித்து மகிழும் வகையிலான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் சிறுவர் விளையாட்டுக்கான பகுதி மற்றும் பல வகையான உணவு காட்சிக்கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன என்றும் இளம் வயதினருக்கான உயர் கல்விக்கான வாய்ப்புகளும் இங்கு பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.