வெளிவிவகார அமைச்சின் பிராந்திய அலுவலகம் நாளை (26) யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
யாழ் மாவட்டச் செயலகத்தில் அமைக்கப்படும் இப்பிராந்திய அலுவலகம் நாளை (26) வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவினால் திறந்து வைக்கப்படவுள்ளது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
யாழ் மக்கள் வெளிவிவகார அமைச்சினால் நிறைவேற்றிக்கொள்ளவேண்டிய அனைத்து செயற்பாடுகளுக்கும் கொழும்பிற்கு வரவேண்டியிருந்த நிலையில் இனி வரும் காலங்களில் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில் தமது தேவைகளை பூர்த்தி செய்யதுக்கொள்ள முடியும் என்று அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வலுவலகமானது வார நாட்களில் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.15 வரை திறந்திருக்கும் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.