மட்டக்களப்பு மாவட்டத்தின் சுற்றாடலைப் பேணும் நோக்கத்துடனும் மாவட்ட மக்களிடையே சுற்றாடல் தொடர்பான மனோநிலை மாற்றத்தினை ஏற்படுத்தும் முகமாகவும் மாவட்டத்தில்
செயற்படுகிற்ன திணைக்களங்களை உள்ளடக்கிய வகையில் நேற்று (20) முதல் சூழலைத் தூய்மைப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை முதல் மட்டக்களப்பு நகரின் காந்திப் பூங்கா, நீதிமன்ற வளாகப் பிரதேசம், மாவட்ட செயலகம் அதனைஅண்டிய பிரதேசங்கள், திருமலை வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் துப்பரவு செய்யப்பட்டன.
ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவான நிலைத்திருக்கும் அபிவிருத்திக்கான யுகம் என்னும் தொனிப்பொருளில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுத்தமான சுற்றாடலைப் பேணுவதன் மூலம் நுளம்புப் பெருக்கத்தினை தடுத்து டெங்கு நோயைத் தடுப்பது இதன் நோக்கமாகும்.
இது தொடர்பில் கிராமங்கள் தோறும் உள்ள கள நிலை உத்தியோகத்தர்களாகச் செயற்படும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், மற்றும் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களுடன் பாதுகாப்புத்தரப்பினரும் இணைந்து இந்த நடவடிக்கையினை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான ஆரம்பமாக திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், முப்படைகளைச் சேர்ந்த படைவீரர்கள், மற்றும் அதிகாரிகளும் இணைந்து இன்றைய தினம் மட்டக்களப்பினைத் தூய்மைப்படுத்துதல் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்துக்கான ஜனாதிபதியின் விஜயம் எதிர்வரும் 01ஆம் திகதி நடைபெறுவதையொட்டி இந்த சூழலைத் தூய்மைப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாவட்ட செலயகம், பிராந்திய சுhகதார சேவைகள் திணைக்களம் என்பன இணைந்து இதனை முன்னெடுத்துள்ளன. இத்திட்டமானது பிரதேச செயலாளர்கள், சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் ஊடாகவும் விரிவு படுத்தப்படும் வகையில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
LDA_dmu_batti