“நல்லாட்சி தொடர்பான பௌத்த முன்னுதாரணம்” நூல் வெளியீடு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று (16) பிற்பகல் கொழும்பில் நடைபெற்றது.
நல்லாட்சியின் முக்கியத்துவத்தை உலகத்துக்கு கூறுவதற்காக பௌத்த தத்துவத்தின் ஊடாக நல்லாட்சி எண்ணக்கரு தொடர்பான நூலொன்றை எழுதுமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்புக்கமைய யுனெஸ்கோ தலைமையகத்தின் சமய விவகார பணிப்பாளரான பிரான்ஸ் சோபோன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வணக்கத்துக்குரிய தம்பலாவல தம்மரதன தேரர் மற்றும் அந்த பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பாறுகொஸ் வெனட் ஆகியோரால் Buddhist Ideals of Good Governance என்ற இந்நூல் எழுதப்பட்டுள்ளது .
நிகழ்வில் பேசிய ஜனாதிபதி அவர்கள் நல்லாட்சி எண்ணக்கருவுக்கு வெளியே இருந்து சமூகத்தில் நல்லாட்சி கோட்பாடுகளை அமுல்படுத்துவது இலகுவான விடயமல்ல.
இயன்றளவு உயர்ந்த பட்ச நல்லாட்சி எண்ணக்கருவிற்கமைய செயற்பட்டு அந்த சவால்களை வெற்றிகொள்வதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று இதன்போது ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இந்நூல் இணையதளத்திலும் வெளியிடப்பட்டது. நூலின் முதற்பிரதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
அதிவணக்கத்துக்குரிய ஞானீஸ்சர மகாநாயக்க தேரர் உள்ளிட்ட பிக்குமாரும், அமைச்சர்களான கயந்த கருணாதிலக்க, விஜேதாஸ ராஜபக்ஸ, அர்ஜூன ரணதுங்க, ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் நிமல் போபகே, அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் ரங்க கலன்சூரிய ஆகியோர் உள்ளிட்ட உள்நாட்டு வெளிநாட்டு அறிஞர்களும் நிகழ்வில் பங்குபற்றினார்கள்.