நோர்வே தொழில்நுட்பம் மற்றும் நிதியுதவியுடன் மீன்பிடித்துறை பாதுகாத்தல், நடைமுறைப்படுத்தல் மற்றும் அபிவிருத்தி செய்தல் நோக்குடன் தேசிய மீன்பிடிக்
கொள்கையை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
உலகின் சிறந்த மீன்பிடி தொடர்பான தேசிய கொள்கையை கொண்ட நாடான நோர்வேயானது மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவின் கோரிக்கைக்கமைய இவ்வுதவியை மேற்கொள்ளவுள்ளது.
கடந்த வருடம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நோர்வே பிரதமர் எர்னா சொல்பேரக்கிடம் அமைச்சர் இக்கோரிக்கையை முன்வைத்திருந்தார்.
இதற்கமைய, மீன்பிடி மற்றும் கடல்வளம் தொடர்பில் பரந்த அறிவும் அனுபவமுடைய நோர்வே நிபுணர்கள் குழுவினர் இலங்கை வரவுள்ளனர் என்றும் அவர்கள் இலங்கை நிபுணர்களுடன் இணைந்து கொள்கைய தயாரிக்கவுள்ளனர் என்றும் அமைச்சர் சுட்டிகாட்டினார்.
இவ்வருட இறுதிக்குள் கொள்கையை தயாரித்து முடிக்குமாறு அமைச்சர் நிபுணர்கள் குழுவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.