‘கலா பொல’ (Kala Pola) திறந்தவெளி ஓவியக் கண்காட்சி எதிர்வரும் 22ம் திகதி காலை 8.00 மணிக்கு, கொழும்பு 7, ஆனந்தகுமாரசுவாமி மாவத்தையில் ஆரம்பமாகவுள்ளது.
அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பிறைஸ் ஹட்சன்ஸ் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ள இவ்வோவியக் கண்காட்சியானது 24வது தடவையாக இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள ஓவியர்கள் இக்கண்காட்சியில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.