தேசிய தைப்பொங்கல் விழா நாளை (15) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையில் நுவரெலியா சினிசிட்டா மைதானத்தில் நடைபெறவுள்ளது.
பிரதமர் அலுவலகத்தின் சைவ சமய கலாசார பிரிவு மற்றும் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு ஆகியன இணைந்து தைப்பொங்கல் தேசிய விழாவை ஏற்பாடு செய்துள்ளன.
தைப்பொங்கல் தேசிய விழாவில் பல கலாசார நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.