ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று 2 வருடங்கள் பூர்த்தியையிட்டு நேற்று (08) மட்டக்களப்பில் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பிஎஸ்.எம்இசார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் கலந்து கொண்டார்.
தேசியக் கொடியேறறலுடன் நடைபெற்ற மாவட்டத்துக்கான உத்தியோக பூர்வ நிகழ்வில், மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஆகியோர் உரையாற்றினர்.
அதனையடுத்து மாவட்ட செயலக முன்றலில் மரநடுகையும் இடம் பெற்றது.
இந்த நிகழ்வுகளில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ்.அமலநாதன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன், பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் எஸ்.இன்பராஜன், பிரதேச சபைகளின் செயலாளர்கள், திணைக்களத்தலைவர்கள், உத்தியோகத்தர்களுமு; கலந்து கொண்டனர்.
LDA_dmu_batti