இம்முறை பெரும்போகத்தில் நெல் உற்பத்தி செய்வதற்கு விவசாயிகளுக்கு பசளை வழங்குவதற்காக திரைசேரியினால் 7000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
அத்தொகையில் 5500 மில்லியன் ரூபா ஏற்கனவே கமத்தொழில் அமைச்சுக்கு கையளிக்கப்பட்டுள்ளதுடன் இன்னும் சில தினங்களில் மிகுதி 1500 மில்லியன் ரூபாவும் கையளிக்கப்படும் என்று நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
கமத்தொழில் அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள குறித்த நிதியானது விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படவுள்ளது.
செப்டெம்பர் மாதம் தொடக்கம் மார்ச் மாதம் வரையான பெரும்போகத்தில் நெல் உற்பத்தி செய்வதற்காக விவசாயிக்கு ஒரு ஹெக்டேயருக்கு 25,000 ரூபா வீதம் நிதி பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
விவசாயிகளுக்கு பசளை மானியத்திற்குப் பதிலாக நிதி வழங்குவதற்காக நிதியமைச்சினல் 55,000 மில்லியன் ரூபா நிதியொதுக்கப்பட்டுள்ளது.
உர மானியத்தை பெற்றுக்கொள்ளும் விவசாயிகள் தொடர்பான தகவல்கள் தற்போது சேகரிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த விவசாயிகளுக்கு உடனடியாக நிதியை வைப்பிலிடுவதற்கான நிதியை திரைசேரி வழங்கவுள்ளது என்றும் நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.