மனித வள மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தினால் வேலைவாய்ப்பு சேவை மத்தியநிலையமொன்று இன்று (15) மாத்தறை மாவட்டச் செயலகத்தில் திறந்து வைக்கப்பட்டது.
தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் இராஜாங்க அமைச்சர் தவீந்திர சமரவீர தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வானது காலை 9.00 மணிக்கு இடம்பெற்றது.
தற்போது தொழிற்சந்தையில் நிலவும் வேலைவாய்ப்புக்களை அடையாளங்கண்டு மாத்தறை மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை பெற்று கொடுத்து அபிவிருத்திக்கு பங்களிப்பு வழங்குதல் மற்றும் தொழில் வழங்கும் தனியார் நிறுவனம் மற்றும் இளைஞர் யுவதிகளுக்கிடையில் தொடர்பை ஏற்படுத்துதல் இதன் நோக்கமாகும்.
இத்திறப்பு விழாவின் போது பிரதேச அரசியல் தலைவர்கள், மாத்தறை மாவட்ட செயலாளர் பிரதீப் ரத்நாயக்க, அரச அதிகாரிகள் மற்றும் தொழில்வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டனர்.