பாடசாலை ஊடாக பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான பரீட்சை அனுமதி பத்திரங்கள் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் டயூள்யூ.எம்.எ.ஜே புஷ்பகுமார் தெரிவித்தார்.
தனிப்பட்ட பரீட்சாத்திகளுக்கான அனுமதி பத்திரங்கள் அவர்களது தனிப்பட்ட விலாசங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் பரீட்சை அனுமதிபத்திரங்கள் தொடர்பான மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள விரும்புபவர்கள் பரீட்சை திணைக்களத்தின் அவசர தொலைபேசி இலக்கம் 911 அல்லது 0112784208 அல்லது 0112784537 அல்லது, 0113188350 அல்லது 0113140314 அல்லது 0113140314 என்ற தொலைபேசி இலக்கங்களுடனோ அல்லது 0112784422 என்ற பெக்ஸ் இலக்கத்துடனோ தொடர்பு கொள்ள முடியுமென பரீட்சை ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
க.பொ. த சாதாரண தர பரீட்சை டிசம்பர் மாதம் 06ல் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இந்த பரீட்சை டிசம்பர் 15 ஆம் திகதியுடன் நிறைவடையும். வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாடு முழுவதும் 5669 பரீட்சை நிலையங்களில் 7 இலட்சம் மாணவர்கள் இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையங்களாக 538 இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் பரீட்சை மேற்பார்வையாளர் உட்பட பரீட்சை நடவடிக்கைகளில் 6524 பேர் கடமையாற்றவுள்ளனர். பாடசாலை மேற்பார்வையாளர் உட்பட பரீட்சை நடவடிக்கைகளில் 6524 பேர் கடமையாற்றுவுள்ளமை குறிப்பிடத்தக்கது.