எதிர்வரும் தேர்தல்களில் வௌிநாட்டில் வாழும் இலங்கையர்களும் வாக்களிப்பது தொடர்பில் விசேட பாராளுமன்ற தெரிவிக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
வௌிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரள தலைமையில் 20 பேர் கொண்ட இக்குழுவானது சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நியமிக்கப்பட்டுள்ளது.
இப்பாராளுமன்ற தெரிவுக்குழுவில் ஏ.டி. சுசில் பிரேமஜயந்த, டிலான் பெரேரா, சுதர்ஷனி பெர்ணாண்டோபுள்ளே, கலாநிதி ஹர்ஷ டி சில்வா, ரஞ்சன் ராமநாயக்க, கே.என்.டக்ளஸ் தேவானந்தா, காமினி லொக்குகே, மஹிந்த யாப்பா அபேவர்த்தன, கெஹேலிய றம்புக்வெல்ல, சுனில் ஹந்துன்நெத்தி, பிமல் ரத்நாயக்க, ஜே. சி. அலவத்துவல, எஸ். சிறிதரனம், எம்.ஏ. சுமந்திரன், அரவிந்தகுமார், நாலக்க பிரசாத் கொலொன்ன, சந்திம கமகே, முஜிபுர் ரஹ்மான், ஞானமுத்து ஶ்ரீநேசன் ஆகியோர் இக்குழுவில் உள்ளடங்கியுள்ளனர்.