உலக வெசக் தின நிகழ்வு 14ஆவது தடவையாக இலங்கையில் நடத்த உலக பௌத்த தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய எதிர்வரும் 2017ஆம் ஆண்டு மே மாதம் 11, 12, 13 ஆம் திகதிகளில் இவ்வைபவம் நடத்தப்படவுள்ளது.
90 நாடுகளைச் சேர்ந்த பெளத்த தலைவர்கள் பௌத்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட 2000 இற்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஆகியோர் தலைமையில் ஆரம்பமாகவுள்ள இந்நிகழ்வில், பௌத்த கல்வி, தொடர்பாடல் செயலமர்வு, என்பன நடைபெறவிருப்பதுடன் இறுதி நாள் நிகழ்வில் கண்டியில் நடைபெறவுள்ளது.