மாகாணசபைகளில் அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ளும் போது பெண்களின் பங்களிப்பை பலப்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றை மாற்றுக்கொள்கைகளுக்கான கேந்திரநிலையம் ஆரம்பித்துள்ளது.
இதற்கான மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு மற்றும் தேர்தல் திணைக்களம் என்பன பங்களிப்பை வழங்கவுள்ளன.
தெற்க. ஊவா, கிழக்கு மற்றும் வடக்கு ஆகிய மாகாணங்களில் 13 மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் மேற்கொள்ளப்படவுள்ள இவ்வேலைத்திட்டத்தில் உரைகள் மற்றும் கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்படவுள்ளன.
காலி மாவட்டத்தில் எதிர்வரும் 4ஆம் திகதி 9.00 மணிக்கு இச்செயலமர்வு ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், மாவட்ட வனிதாஅப்விருத்தி அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.