2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கு 15,000 ரூபா வீதம் 9,000 பிள்ளைகளுக்கு வெகுமதி வழங்க ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியம் தீர்மானித்துள்ளது.
ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கே இவ்வெகுமதி வழங்கப்படவுள்ளது.
நிதியுதவியைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை இன்று (17) ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய தலைமைக் காரியாலயம் மற்றும் பிரதேச காரியாலயங்களில் அலுவலக நேரங்களில் நேரடியாக சென்று பெற்றுக்கொள்ளலாம்.
அல்லது எதிர்வரும் 18.11.2016 முன்னர் முத்திரையிடப்பட்டு, முகவரி எழுதப்பட்ட "4 x 9" அளவுடைய கடிதவுரையை புலமை பரிசில்கள் பிரிவு, இல.92, கிருல வீதி, நாராஹேன்பிட்ட, கொழும்பு 5 என்ற முகவரிக்கு அனுப்பி வைப்பதன் மூலம் அல்லது, www. etfb.lk என்ற இணையதள முகவரியில் பிரவேசித்துப் பெற்றுக்கொள்ளலாம்.