ஹிக்கடுவ பிரதேசத்தில் புதிய நங்கூரமிடும் தளமொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இம்மாதம் 17ஆம் திகதி மாலை 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
மீன் பிடி மற்றும கடல்வள அபிவிருத்தியமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் 300 மில்லியன் ரூபா பெறுமதியில் நங்கூரமிடும் தளத்தை நிர்மாணிக்கப்படவுள்ளது.
பிரதேச மீனவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டமானது தேசிய உற்பத்திக்கும் பாரிய பங்களிப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வில் காலி மாவட்ட அரசியல் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.