மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய முதலீட்டாளர் மாநாடு மாவட்டச் செயலகத்தின் கேட்போர்கூடத்தில் இன்று (26) நடைபெற்றது.
புதிய முதலீட்டு வாய்ப்புக்களை இனங்காணல்,ஏற்றுமதியை மேம்படுத்தல், புதிய தொழில்முயற்சியாளர்களை உருவாக்குதல் மற்றும் அவர்களுக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல் என்பன இதன் நோக்கமாகும்.
அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச சந்தை வாய்ப்பு அமைச்சர் மலித் சமரவிக்கிரமவின் வழிகாட்டலில் நடைபெற்ற இம்மாநாட்டில் சர்வதேச சந்தை வாய்ப்பு இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தலைமையில் இம்மாநாடு நடைபெற்றது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் கலந்துகொண்ட இம்மாநாட்டை சர்வதேச சந்தை வாய்ப்பு அமைச்சு மற்றும் மட்டக்களப்பு மாவட்டச் செயலகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
இலங்கை முதலீட்டு ஊக்குவிப்புச் சபை, ஏற்றுமதி , அபிவிருத்திச்சபை, தேசிய நீர்வள உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை, மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் முதலீட்டுததிறை சார் நிறுவன அதிகாரிகள், முதலீட்டாளர்கள், புதிய தொழில் முயற்சியாளர்கள் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர்.