காலி துறைமுகத்தில் புதிதாக படகுத்துறை நிர்மாணிப்பதற்கான பணிகளை நேற்று (20) மீன்பிடி மற்றும் கடல்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர ஆரம்பித்து வைத்தார்.
சுமார் 102 மில்லியன் ரூபா பெறுமதியில் நிர்மாணிக்கப்படவுள்ள இப்படகுத்துறையானது எதிர்வரும் எட்டு மாதங்களுக்குள் பூர்த்தி செய்யப்படவுள்ளது.
இந்நிகழ்வில் அமைச்சர் சந்திம வீரக்கொடி, தென்மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா ஆகியோரும் கலந்துகொண்டனர்.