முதலாவது இலத்திரனியல் அடையாள அட்டைகளை அறிமுகம் செய்யும் உத்தியோகபூர்வ நிகழ்வு நேற்று (28) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் உள்நாட்டு விவகார அமைச்சர் எஸ்.பி.நாவின்ன புதிய ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்தினார்.
ஏற்கனவே அடையாள அட்டைகளை வைத்திருப்பவர்கள் மற்றும் சேதமடையாத நல்லநிலையிலுள்ள அடையாள அட்டையை வைத்திருப்பவர்கள் புதிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
எதிர்வரும் காலங்களில் இலத்திரனியல் அடையாள அட்டைக்கான சட்டஒழுங்குகள் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் தற்பொழுது அமுலிலுள்ள அடையாள அட்டையை முற்றாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்
12 இலக்கங்களுடன் கூடிய இவ்வடையாள அட்டையில், சர்வதேச சிவில் விமான சேவை அமைப்பின் (international civil aviation organization – icao) தரத்திற்கு அமைவான புகைப்படமும் இயந்திரத்தினால் வாசிக்கக்கூடிய பார்குறியீடு என்பவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. பெயர், பிறந்த இடம், முகவரி மற்றும் பாலினம் என்பன மும்மொழிகளில் அச்சிடப்பட்டுள்ளதுடன் அடையாள அட்டைக்கு சொந்தக்காரரின் கையொப்பமும் இவ்வடையாள அட்டையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.