மீன்பிடித்துறையில் கேந்திரநிலையமாக காணப்படும் நீர்கொழும்பு களப்பை துறைமுக நகர் திட்டத்தினூடாக 50 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
துறைமுக நகர திட்டத்தினூடாக மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக முன்னெடுத்துச் செல்லப்படும் திட்ட முன்னேற்றம் தொடர்பான கூட்டம் அண்மையில் மீன்பிடி, நீர்வள அபிவிருத்தி அமைச்சில் அண்மையில் நடைபெற்றது. இதன்போது மேற்படி விபரம் அறிவிக்கப்பட்டது/
நீர்கொழும்பு களப்பு தற்போது கடுமையான சூழல் மாசுக்கு காரணமாகியுள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. களப்புக்கு அருகில் மீனை கருவாடாக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோர் பல தொன் அதற்காக பயன்படுத்தப்பட்ட பல தொன் கணக்கான உப்பை களப்பிலிடுகின்றனர். இதனால் களப்பு நீரின் சமநிலைத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நீர் வாழ் உயிரினங்கள், தாவரங்கள் என்பனவற்றின் வளர்ச்சி தடையுறுகிறது.
அதேபோன்று, அகற்றப்படும் மீன் கழிவுகள் களப்பின் சுற்றுப்புறத்தை கடுமையாக மாசடையச் செய்கிறது. 11 காண்களினூடாக மலசலகூட கழிவு நீர் களப்பிற்கு அனுப்பப்படுகிறது. மேலும் கைவிடப்பட்ட பல படகுகளும் களப்பைச் சுற்றி காணப்படுகின்றன.
இதனால் நீர்கொழும்பு களப்பு பாரியளவில் சூழல் மாசடைவிற்குள்ளாகியுள்ளதுடன் மீனவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு பாரிய தடையாகவும் உள்ளது.
எனவே, நீர்கொழும்பு களப்பை துப்புறவு செய்வதற்காக 50 மில்லியன் ரூபா நிதியயொதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான அபிவிருத்தித் திட்டத்திற்கு, மீன்பிடி, நீர்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவின் வேண்டுகோளுக்கமைய 500 மில்லியன் ரூபா நிதியயொதுக்கப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் மீன்பிடித்துறை திணைக்கள பணிப்பாளர் நாயகம் கிரிஸ்டிலால் பெர்ணாண்டோ, மீன்பிடித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் துறைமுக நகர திட்ட பொறுப்பு அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.