புத்தளம் மாவட்டத்தின் நாத்தாண்டிய, மானிங்கல அசோக்கபுர வீட்டுத்திட்டம் நாளை (18) மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது.
கிராம எழுச்சி திட்டத்தின் கீழ் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படும் 43வது வீட்டுத்திட்டம் இதுவாகும்.
வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவின் அழைப்பினை ஏற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பொற்கரங்களினால் இவ்வீட்டுத்திட்டம் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது.
98 புதிய வீடுகளை கொண்டுள்ள 'அசோக்கபுர' கிராமத்தின் நிர்மாணப்பணிகள் கடந்த 2016ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி ஆரம்பமானது. தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் குறைந்த வட்டியுடன் கூடிய வீட்டுக்கடன் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் மக்கள் பங்களிப்புடன் கூடிய வீடு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இக்கிராமம் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.