மட்டக்களப்பு மாவட்டத்தின் பேத்தாளை கருங்காலிச்சோலை தேசிய அருங்கலை பேரவையின் மட்பாண்ட கைப்பணி வியாபார நிலைய திறப்பு விழாவும், உபகரணம் வழங்கும் நிகழ்வும் நேற்று (16) நடைபெற்றது.
தேசிய அருங்கலை பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி உதவிப் பணிப்பாளர் பொன்.குவேதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இதன்போது கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் இருபத்தி நான்கு இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்ட வியாபார நிலையம் திறந்து வைக்கப்பட்டதுடன், களி மண் பிசையும் இயந்திரம் மற்றும் பதினைந்து பேருக்கு சக்கப்போட் உபகரணமும் வழங்கி வைக்கப்பட்டது.
வாழைச்சேனை பேத்தாளை பெண்கள் தலைமை தாங்கும் குடும்ப பெண்கள் மற்றும் வறிய யூவதிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் கைப்பணி நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும் தேசிய அருங்கலை பேரவையின் தவிசாளர் கேசானி போகலாகமஇ பணிப்பாளர் சந்திரமல லயனனே, மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ்.நவேஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், வாழைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சிவநேசராஜா, தேசிய அருங்கலை பேரவையின் ஊழியர்கள், பயனாளிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
LDA_dmu_batti