ஆனமடுவ, கதுறுவெல பிரதேச செயலக பிரிவில் கிராமிய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சுயதொழிலை ஊக்குவித்து வீடு, கிராமம் என்பவற்றை மையமாக கொண்டு பொருளார மேம்பாட்டை ஊக்குவிப்பது இத்திட்டத்தின் நோக்கமாகும் .
உணவு உற்பத்தி, ஆடையுற்பத்தி, கைவினைப் பொருள் உற்பத்தி, நகையுற்பத்தி உட்பட பல்வேறு உற்பத்திகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கதுறுவெல பிரதேச செயலாளர் ஜானக்க தெரிவித்துள்ளார்.
இத்திட்டங்களை மேற்கொள்வதற்கு பயனாளர்களுக்கான நிதியுதவி, பயிற்சி உட்பட அனைத்து வசதிகளும் சமுர்த்தி திட்டத்தினூடாக வழங்கப்படவுள்ளது.
ஏற்கனவே இத்துறைகளில் சுயதொழில் முயற்சியை ஆரம்பித்துள்ளோரை வலுவூட்டும் செயற்பாடும் இத்திட்டத்தினூடாக முன்னெடுக்கப்படவுள்ளது. அவர்களுடைய குறைகளை கண்டறிந்து கைத்தொழிலை மேலும் வளப்படுத்த தேவையான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார தலைமையில் அண்மையில் கதுறுவெல பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
கருவலகஸ்வெவ பிரதேச செயலாளர் ஜனக்க துஷார பாலசூரிய உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.