தேசிய தீபாவளி நிகழ்வு 2017 நேற்று (15) அலரி மாளிகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
நாளை (18) உலகம் முழுவதிலும் உள்ள இந்துக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடவுள்ள நிலையைில் நேற்று தேசிய நிகழ்வு அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது தீபாவளி பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கு ஜனாதிபதியும் பிரதமரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்து விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் உட்பட பலர் இந்நகழ்வில் கலந்துகொண்டனர்.