நாட்டில் கொள்கை நிலைப்படுத்தல், போக்குவரத்து உட்பட சில துறைகளின் அபிவிருத்திக்காக எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குள் 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்க Millennium Challenge Corporation த்தில் ஐரோப்பிய ஆசிய பசுபிக் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்காக உப தலைவர் பாத்திமா சுமர் இணக்கம் வௌியிட்டுள்ளார்.
உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ள நிதியமைச்சர் மங்கள சமரவீர பாத்திமா சுமருடன் நியுயோர்க்கில் இடம்பெற்ற சந்திப்பில் மேற்படி விடயம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடியபோதே இவ்விணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
வறுமையை குறைத்தல், பொருளாதார வாய்ப்புக்களை மேம்படுத்தல் போன்ற விடயங்களுக்கு கடனுதவி வழங்குவது தொடர்பில் நாட்டுக்கு வழங்கப்படும் நிதிக்கடன் வழங்குவது குறித்து ஆராய்வதற்கு கடந்த ஜூலி மாதம் பாத்திமா சுமர் தலைமையிலான குழு இலங்கை வந்திருந்தது.
இவ்விஜயத்தின் போது முதலீடு செய்யக்கூடிய துறைகள் குறித்த அடையாளங்கண்டு ஆராய்வது உட்பட நாட்டின் அபிவிருத்தியைக் கருத்திற்கொண்டு 1.1 பில்லியன் ரூபா நிதியுதவி வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
நல்லாட்சியை நடைமுறைப்படுத்தல், ஊழலை தடுத்தல் மற்றும் மனித உரிமையை மேம்படுத்தல் போன்றவிடயங்களுக்காக இந்நிதியுதவி வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.