அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய பதில் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன இன்று (13) தனது பணிகளை பொறுப்பேற்றார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக கடமையாற்றும் அவர், பணிகளை பொறுப்பேற்ற பின்னர் திணைக்கள கேட்போர்கூடத்தில் திணைக்கள ஊழியரை சந்தித்து தனது கடமையை நிறைவேற்றுவதற்கு உள்ள சவால்களை வெற்றிக்கொள்ள அனைத்து ஊழியர்களின் ஒத்துழைப்பு அவசியம் என்பதை வலியுறுத்தினார்.
பணிகளை வெறுமனே சுற்றுநிரூபத்திற்குள் உள்ளடக்கப்பட்டு கொண்டு செல்வது என்ற எண்ணப்பாடு சாத்தியமற்றது என்று சுட்டிக்காட்டிய அவர், திட்டமிட்டு பணிகளை முன்னெடுப்பதற்கு சுற்றுநிரூபங்கள் ஒரு தடையில்லை என்று தாம் நம்புவதாகவும் தெரிவித்தார்.
இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பில் பாரிய பங்களிப்பை வழங்கிய சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன சிவில் சமூகம் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச அனுபவங்களை தன்னகத்தே கொண்வராவார்.
நிதி மற்றும் ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் (அபிவிருத்தி மற்றும் திட்டமிடல்) திலகா ஜயசுந்தரன, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் எராநந்த ஹெட்டியாராச்சி, அரசாங்க தகவல் திணைக்கள முன்னாள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரங்க கலன்சூரிய உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.