இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள 72 மெற்றிக் தொன் அரசியில் முதற்கட்டமாக 12 மெற்றிக் தொன் அரிசி இன்று (10) நாட்டரிசி கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
இந்திய தனியார் விநியோகத்தர் மூலமாக இவ்வரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளது. நாட்டில் அரசி பற்றாக்குறை ஏற்படாதிருக்கவும் அரிசி விலையை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும் இந்தியாவில் இருந்து அரசி இறக்குமதி செய்யப்படுகிறது.
கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் கீழியங்கும் கூட்டுறவு மொத்த வியாபார நிறுவனம் இறக்குமதி செய்யப்பட்ட லங்கா சத்தோச நிறுவனத்தினூடாக விற்பனை செய்யப்படவுள்ளது.
இவ்வரிசியின் மொத்த விற்பனை விலையாக கிலோவுக்கு 72 ரூபாவாகவும் சில்லறை விலையாக 74 ரூபாவாகும் விற்பனை செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.