மாமாங்கேஸ்வரர் தீர்த்தக் குளத்தை புனரமைப்புப் பணிகளை அடுத்த ஆண்டு திருவிழாவுக்கு முன்னதாக புனரமைப்பு செய்து தருவதாக கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம உறுதியளித்துள்ளார்.
நேற்று (09) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த அவர், ஆலயத்திற்கு விஜயம் செய்து, பூஜை வழிபாட்டில் கலந்துகொண்டதுடன் குறைப்பாடுகள் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் ஆராய்ந்தபோதே இவ்வாறு கூறினார்.
இதன்போது, ஆலயத்தின் தீர்த்தக் குளத்தினை புனரமைத்துத் தருமாறு ஆலய நிருவாகத்தினர் கோரியதற்கமைவாக தீர்பாசனத் திணைக்கள பொறியியலாளரின் உதவியுடன் மட்டக்களப்பு மாநகரசபைபுடன் இணைந்து தீர்த்தக் குளத்தினை புனரமைத்துத் தருவதாக இதன்போது ஆளுனர் உறுதியளித்தார்.
மேலும் ஆலய வளாகம் துப்பரவு செய்யும் பணிக்கு மேலும் தொழிலாளர்களை ஈடுபடுத்த மாநகரசபையுடன் பேசுவதாகவும் அவர் ஆலய நிருவாகிகளிடம் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே.துரைராசசிங்கம், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர், கிழக்கு மாகாணசபை செயலாளர்கள் மற்றும் ஆலய வண்ணக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
LDA_dmu_batti