மேல்மாகாண 'தேசிய ஓய்வுபெற்றோர் தின நிகழ்வு - 2017 எதிர்வரும் 8ஆம் திகதி காலை 9.00 மணிக்கு கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் கம்பஹா, கொழும்பு மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஓய்வுபெற்றோர் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.
சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தலைமையில், நடைபெறவுள்ள இந்நிகழ்வில் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, இராஜாங்க அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே, அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி மற்றும் கம்பஹா, கொழும்பு, களுத்துறை ஆகிய மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.