மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடியில் புதிய பொதுச்சந்தைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஏறாவூர் பற்று பிரதேச சபை செயலாளர் எஸ். பேரின்பராஜா தலைமையில் நேற்றுமுன்தினம் (01) நடைபெற்றது.
46 இலட்சம் ரூபாய் செலவில் அமையப் பெறவுள்ள இக்கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல்லை மட்டக்களப்பு உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே. சித்திரவேல் அதிகாரிகள் நாட்டி வைத்தனர்.
ஏறாவூர் பற்று பிரதேச சபைப்பிரிவிலே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும் வருமானத்தை ஈட்டித்தருவதும் செங்கலடி பொதுச்சந்தையில் நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் தங்களது வர்த்தகத்தை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.