கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சை மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கான புதிய கட்டிடம் அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று (02) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமானது.
சிறு பிள்ளைகளுக்கான இதய நோய் சிகிச்சை பிரிவு மற்றும் அவசர சிகிச்சை பிரிவு என்பவற்றை அபிவிருத்தி செய்வதற்காக இலங்கை அரசு மற்றும் 'சிறிய இதய திட்டம்' ஆகியன இணைந்து இப்புதிய கட்டிடத்தை நிர்மாணிக்கவுள்ளன. புதிய பத்து மாடி கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக இரண்டு பில்லியன் ரூபா செலவாகும் என்று கணிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின் போது 'சிறிய இதயம்' திட்டத்தின் பொறுப்பாளர் சங்கைக்குரிய கிரிபத்கொட ஞானரத்ன தேரர், பேராயர் மெல்கம் ரஞ்சித், சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, பிரதியமைச்சர் பைசல் காசிம், சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சுகததாச, பாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தியரத்ன, வைத்தியசாலை பணிப்பாளர் டப்ளியு. கே. விக்கிரமசிங்க ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.