துறைநீலாவணை கிராமத்தின் பிரதான வீதிக்கு 1.4 மில்லியன் செலவில் தெரு மின்விளக்கு பொருத்துவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி. பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் முயற்சியினால் பெரியநீலாவணைச் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துறைநீலாவணைக் கிராமத்தின் பிரதிநிகளை மாவட்ட செயலகத்திற்கு அழைத்த மாவட்டச் செயலாளர் தெரு மின்விளக்கப் பொருத்தும் வேலையினை உடனடியாக ஆரம்பிப்பதற்கான அனுமதிக்கடிதத்தினை துறைநீலாவணைக் கிராமத்தின் பிரதிநிதிகளிடம் வழங்கினார்
இந் நிகழ்வில் மாவட்டசெயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் இரா. நெடுஞ்சழியன் மற்றும் உதவித்திட்டமிடல் பணிப்பாளர்களான ஏ.சுதர்சன் ஏ.சுதாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அதேவேளை துறைநீலாவணை மக்களின் நன்மை கருதி பெரிய நீலாவணைச் சந்தியில் இருந்து துறைநீலாவணைக்குச் செல்லும் பிரதான வீதிக்கு தெருமின்விளக்குப் பொருத்துவதற்கான ஒழுங்கினை செய்துதந்த அரச அதிபர் திட்டமிடல் பணிப்பாளர் உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள் அனைவருக்கும் துறைநீலாவணை மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
LDA_dmu_batti