தகவல் அறியும் உரிமைக்கான சர்வதேச தினம் இன்று (28) ஆகும்.
தகவல் அறியும் உரிமைக்கான சர்வதேச தினத்தை முன்னிட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'இலங்கையில் தகவல் அறிந்துகொள்வதற்கான சட்டமூலத்தின் செயன்முறை பயன்பாடு" என்ற தலைப்பிலான செயலமர்வு நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் கொழும்பில் நடைபெறவுள்ளது.
இச்செயலமர்வில் 'தகவல் அறியும் உரிமை சட்டமூலத்தை சமூக மயப்படுத்தலின் முக்கியத்துவம்' என்ற தலைப்பின் கீழ் உரையாற்றப்படவுள்ளதுடன் தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் வெற்றி மற்றும் அரச நிறுவனங்களில் இச்சட்டமூலம் பெற்றுக்கொண்டுள்ள அனுபவங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டமூலத்தை செயற்படுத்தும் போது பெற்றுக்கொண்ட அனுபவங்கள் தொடர்பில் பகிர்ந்துக்கொள்வதற்கு பல நிறுவனங்களுக்கு இச்செயலமர்வில் சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் பிரதியமைச்சர் லசந்த அலகியவன்ன, நிதி மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ் சமரதுங்க, மேலதிக செயலாளர்களான ரமணி குணவர்தன, திலக்கா ஜயசுந்தர, தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பியதிஸ்ஸ ரணசிங்க உட்பட உயர் மட்ட அரச அதிகாரிகள் மற்றும் மேல் மாகாணத்தின் அனைத்து அரச நிறுவனங்களினதும் தகவல் அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.