கமநல சேவைகள் திணைக்களத்தின் செயற்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளார் பிரிவிற்குட்பட்ட கன்னன்குடா பிரதேசத்தில் உவர்நீர்த் தடுப்பு அணைக்கட்டு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு நேற்றுமுன்தினம் (27) பகல் கமநல சேவைகள் திணைக்கள மட்டக்களப்பு மாவட்டப் பிரதி ஆணையாளர் நடராஜா சிவலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர், ஞானமுத்து ஸ்ரீநேசன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் மற்றும் அதிகாரிகள் பிரதேச பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனா;.
கமநல சேவைகள் திணைக்களத்தின் 05 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மேற்படி அணைக்கட்டு அமைக்கப்படவுள்ளது. கிழக்கு மாகாண விவசாய அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க மேற்படி திட்டம் கமநல சேவைகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படுவதுடன் இது போன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 47 திட்டங்களுக்கு ஒதுக்கீடுகள் பெறப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
LDA_dmu_batti