உலக உணவு தினத்தை முன்னிட்டு பாரம்பரிய உணவு தயாரிக்கும் போட்டி மட்டக்களப்பு மாவட்ட விவசாயத் திணைக்கள அலுவலகத்தில் நேற்று (25) நடைபெற்றது.
உதவி விவசாயப் பணிப்பாளர் ஆர். பேரின்பராஜா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில்இ கிழக்கு மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் ஆர்.கரிஹரன், விதை உற்பத்தி திணைக்கள பிரதி விவசாயப் பணிப்பாளர் எஸ்.சிவநேசன், ஓய்வூபெற்ற பாடவிதான அதிகாரி திருமதி ஆர்.கருணாகரன் உள்ளிட்டோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.
எதிர்வரும் ஒக்டோபர் 16 அன்றைய உலக உணவு தினத்தை முன்னிட்டு இப் பாரம்பரிய உணவு தயாரிக்கும் போட்டியில் நடைபெற்றது.
இப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள விவசாயப் பிரிவூகளிலிருந்து வருகைதந்த விவசாயிகள் பலர் கலந்துகொண்டு தம்மால் தயாரிக்க முடிந்த உணவுகளை போட்டி விதிமுறைகளுக்கமைவாக தயாரித்தனர்.
இப் போட்டியில் தெரிவுசெய்யப்படுவோர் கண்டி பேராதனையில் நடைபெறவிருக்கும் தேசிய மட்ட போட்டியில் கலந்துகொள்வார்கள் என விவசாயத் திணைக்கள அதிகாரிகளார் இதன்போது தெரிவித்தனர்.
LDA_dmu_batti