சர்வதேச கடல் மாநாடு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9ம் மற்றும் 10ம் திகதிகளில் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
பாதுகாப்பு அமைச்சும் இலங்கை கடற்படையும் இணைந்து கடற் பாதுகாப்பை விரிவுபடுத்துவதற்கான மிகவும் விரிவான சமுத்திர நோக்கு என்ற தொனிப்பொருளில் இம்மாநாட்டை நடத்தவுள்ளன.
அமெரிக்கா, சீனா, கனடா, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 38 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.
கடற்பிராந்திய நாடுகள் எதிர்நோக்கும் சவால்களை இணைந்து முகங்கொடுப்பது என்பதே இம்மாநாட்டின் பிரதான நோக்கமாகும்.
இம்மாநாடானது இலங்கையில் எட்டாவது தடவையாக நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.