கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படும் என்று பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இம்மதிப்பீட்டுப் பணிகள் இரு கட்டங்களாக முன்னெடுக்கப்படும் என்றும் முதற்கட்ட மதிப்பீட்டுப் பணி ஜனவரி மூன்றாம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரையும் இரண்டாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் ஜனவரி மாதம் 21ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரையும் நடைபெறும் என்றும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.