"இணையத்தில்தமிழ்மொழிபயன்பாடு "சர்வதேச பயிற்சிப்பட்டறை எதிர்வரும்வியாழக்கிழமை (22 டிசெம்பர் 2016) அன்று இரு அமர்வுகளாக மட்டக்களப்பு கோவில் குளத்திலுள்ள உயர்தொழில் நுட்பவியல் நிறுவனத்தில் இடம்பெறவுள்ளது.
கிழக்குமாகாணக்கல்வி அமைச்சு, உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்பமன்றம் மற்றும் மட்டக்களப்பு உயர் தொழில் நுட்பவியல் நிறுவனமும் இணைந்து இப்பயிற்சி செயலமர்வை நடத்தவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தகவல் தெரிவு செய்யப்பட்ட தகவல்தொழில்நுட்பத்தில் மிகுந்த ஈ டுபாடுள்ள 70 மாணவர் கல்வி வலயங்களில் தகவல் தொழில் நுட்பத்தினை கற்பிக்கும்ஆசிரியர்களுக்கும் வெவ்வேறான இலத்திரணியல் பயிலரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் வெளிநாடுகளைச் சோர்ந் கணிணி விற்பனர்கள் மற்றும் விரிவுரையாளகால் பல்வேறுபட்ட தலைப்புக்களில் பயிற்சிப்பட்டறை இடம்பெறவுள்ளது.
இதற்கான பிரதான அனுசரணையினை மட்டக்களப்பு அரிமாக் கழகம் வழங்கியுள்ளது.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் வேண்டுதலின் பெயரில் மட்டக்களப்பு உயர் தொழில்நுட்ப நிறுவக நிருவாகத்தினர் மற்றும் விரிவுரையாளர்கள் மாணவர்கள் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றனர்.
மட்டக்களப்பு உயர்தொழில் நுட்பவியல் நிறுவனத்தின் கல்விசார் இணைப்பாளர் திருசெல்வரெத்தினம் ஜெயபாலன் தலைமையில் இடம்பெறும் இப்பயிற்சிப்பட்டறைக்கு முதன்மை அதிதியாக மட்டக்களப்பு மாவட்டச்செயலாளர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ், கௌரவ அதிதிகளாக அமெரிக்காவிலிருந்து தமிழ் இணையத்துறை முன்னோடி உத்தமம் நிறவனத்தின் உபதலைவர் சுகந்தி நாடார், இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் பிரதிப்பணிப்பாளர் நாயகம் எம்.எஸ்.நசீர் ஆகியோரும் விசேடஅதிதிகளாக திருகோணமலை மற்றும் உயர் தொழில்நுட்பக்கல்வி நிறுவக பணிப்பாளர் ஜெ.பிரதீபன், மட்டக்களப்பு அரிமா சங்கத்தின் தலைவர் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
LDA_dmu_batti