வினைத்திறனுடன் செயற்படும் உள்ளூராட்சி சபைகளுக்கு ஸ்வர்ணபுரவர விருது வழங்கும் நிகழ்வு நாளை (20) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நெளும் பொக்குன மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் நடைபெறவுள்ளது.
பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இவ்விருது வழங்கல் நிகழ்வில், நாடு முழுவதிலும் உள்ள உள்ளூராட்சி சபைகளின் செயலாளர்கள், ஆணையாளர்கள் மற்றும் முன்னாள் தவிசாளர்களை கலந்துகொள்ளவுள்ளனர்.
உள்ளூராட்சிசபைகளின் வினைத்திறமை மேம்படுத்தவும் மனித நேயத்துடன் கூடிய நிர்வாகத்தை கட்டியெழுப்பவும் ஊக்குவிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்படுகிறது என்று மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எச். டீ. கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.
ஸ்வர்ணபுரவர விருது வழங்கல் நிகழ்வில் நாடு முழுவதிலுமிருந்து சுமார் 330 உள்ளூராட்சிசபைகள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.