• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

மாவட்ட செயலக சித்திவிநாயகர் ஆலய மஹா கும்பாபிசேக எண்ணெய் காப்பு

மட்டக்களப்பு மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிசேகத்தனை முன்னிட்டு இன்று (02) எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.
 
எண்ணெய்க்காப்பு சாத்தும் இன்று காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெறவுள்ளது. இதற்கான எண்ணெய் மாவட்ட செயலக நலன்புரிச் சங்கத்தினால் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
 
நேற்று யாழ் உரும்பிராய் சிவ தர்மாசாஸ்தா ஆலய குரு ஐய்யப்ப குரு சுவாமி பிரம்மஸ்ரீ தாணு வாசுதேவ சிவாச்சாரியார் தலைமையில் ஆரம்பமான கிரியைகளை அடுத்து இன்று எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வுகள் நடைபெற்று வருவதாக ஆலய பிரதம குரு சிவஸ்ரீ உ.ஜெகதீஸ்வர சர்மா தெரிவித்தார்.
 
நாளை வெள்ளிக்கிழமை (03) காலை புண்ணிய வாசனம், யாகபூசை ஹோமம், மஹா பூர்ணாகுதி, அந்தர் பலி, பகிர் பலி, யாக தீப ஆராதனை புஸ்பாஞ்சலி, வேத ஜ.தோத்திர திருமுறை பாராயணம், கீத வாத்திய சமர்ப்பணம், யாத்திர தானம், மங்கல வாத்திய சகிதமாக வீதிப்பிரதட்சணம் நடைபெறும்.
 
அதனையடுத்து, சுப நேரத்தில் தூபி அபிசேகம், மஹா கும்பாபிசேகம் காலை 9.15 மணிமுதல் 10.42 வரையான சுப வேளையில் நடைபெறும்.
 
கும்பாபிசேகத்தினையடுத்து 10 நாட்கள் மண்டலாபிசேகம் நடைபெற்று 11ஆவது நாள் சங்காபிசேகம் நடைபெற்று குப்பாபிசேகம் நிறைவு பெறும்.
 
கும்பாபிசேக கால பிரதம சிவாச்சாரியாராக கோட்டமுனை மகமாரி அம்மன் ஆலய பிரதம குரு பிரம்ம ஸ்ரீ உலகநாத விக்கினேஸ்வரக் குருக்களும், சாதகாச்சாரியாராக ஏறாவூர் சித்திவிநாயகர் ஆலய குரு சிவஸ்ரீ அ.கு.லிகிதரன் குருக்கள், சிறப்பு குருவாக மட்டக்களப்பு இந்துக் கல்லூரி பிரதம குரு பிரம்மஸ்ரீ ரி.சரவணபவ சர்மாவும் கிரியைகளை மேற்கொள்வர்.
 
LDA_dmu_batti

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.